Sunday, 17 January 2016

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...)

17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு மதுக்கூர் முஸ்லிம் இளைஞர்

முன்னேற்ற சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம்

நடைபெற்றது.

கீழவீதி சங்கத்துக்கு உட்பட்ட  மக்கள் அனைவரும் சந்தை பள்ளி அருகில்

இருக்கும் முஸ்லிம் இளைஞர் முன்னேற்ற சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில்

கலந்து கொண்டனர்.

வாக்கு பதிவின் மூலம் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க MSA அப்துல் ரஜாக்

அவர்களும், தமிழ்நாடு காதர் அவர்களும், TAKM முகைதீன் மரைக்காயர்

அவர்களும் தேர்தலை நடத்தி வைத்தனர்.

தலைவர் பொறுப்புக்கு 1.ஜின்னா மற்றும் 2.முஸ்தபா அவர்களும், செயலாளர்

பொறுப்புக்கு ராயல் 3.ஜபருல்லாஹ் மற்றும் 4. MKM கரீம் அவர்களும்,

பொருளாளர் பொறுப்புக்கு 5.வசந்தம் சாகுல் அவர்களும், 6.சேட் வாவா அவர்களும்,

7. Er.இத்ரிஸ் அவர்களும், 8.ஜாகீர் அவர்களும், 9.மஜீத் அவர்களும் நிர்வாகிகள்

தேர்வுக்கு போட்டியிட்டார்கள்.

ஓட்டு பதிவுக்கான சீட்டு வந்திருந்த மக்கள் அனைவரும் கொடுக்கப்பட்டு, பின்பு

வாக்கு பதிவு நடைபெற்றது.

பின்பு 12.40 மணிக்கு வாக்கு பதிவு நிறைவு பெற்று ஓட்டு எண்ணும் பணி

நடைபெற்றது.

வெற்றி பெற்ற நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.

முதலாவதாக தலைவருக்கான பொறுப்புக்கு SSMH. உருட்டி ஜின்னா அவர்களும் ,

செயலாளருக்கான பொறுப்புக்கு MKM. கரீம் அவர்களும், பொருளாருக்கான

பொறுப்புக்கு Er. A.இதிரிஸ் அவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.






0 comments:

Post a Comment

அதிகம் வாசித்தது

Recent Posts

MKR PH